மஞ்சள் துண்டு ரகசியம் – கலைஞரின் தத்துபித்துவங்கள்

தேர்தல் தோல்விக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் – ஊழல் , இலங்கை பிரச்சினை, குடும்ப அரசியல், சினிமா  , வெயில் – கலைஞர் இதையெல்லாம் ஏற்கவில்லையாம்.  அவர் ஜாதகத்தில் குரு வலுவிழந்தது விட்டதுதான் காரணம்,. இனி மஞ்சள் துண்டு  வேண்டாம் , வெள்ளை துண்டு அணியுங்கள் என சொல்லி சில ஜோசியர்கள் காசு வாங்கி சென்று விட்டனராம்..
 
எனவேதான் இப்போது வெள்ளை துண்டு அணிய ஆரம்பித்து இருக்கிறாராம் கலைஞர்,,
 
இந்த செய்தியை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை.. ஏன் வெள்ளை துண்டுக்கு மாறினார் என இனிமேல்தான் விளக்கம் அளிப்பார்..
 
இது ஒரு புறம் இருக்க, அவர் என் மஞ்சள் துண்டு அணிகிறார் என புதிய அரசியல் நோக்கர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. எனவே பொது நலன் கருதி, மஞ்சள் துண்டுக்கு அவர் அளித்த விளக்கங்களை திரட்டி தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்டுகிறது…
 
***************************************************
 
 
 
மஞ்சள் துண்டு ஏன்? – கலைஞர் விளக்கம்
 
1 சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக “ஓஷோ’ வின் “தம்மபதம்’ எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்’
 
எனவேதான் ஓஷோவை பின்பற்றி மஞ்சள் துண்டு அணிகிறேன்

 

2  புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்

3  டாக்டர் ராமதாஸ் ஒரு நிகழ்ச்சியின் போது , மஞ்சள் துண்டு அணிவித்தார். அவர் நட்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்

4  எனக்கு கழுத்து வலி ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கழுத்து பகுதிக்கு இதமான வெப்பம் தேவை..  இதமான வெப்பம் அளிக்கும் தன்மை மஞ்சள் துண்டுக்கு உண்டு என்று கூறிய அந்த மருத்துவ அடிப்படியில்தான் மஞ்சள் துண்டு அணிகிறேனே தவிர வேறல்ல.

5  ஒரு நாள் தற்செயலாக மஞ்சள் துண்டு அணிந்தேன்.. அது எனக்கு பொருத்தமாக இருப்பதாக , நேர்த்தியாக இருப்பதாக குடும்பத்தினர் , கட்சியினர் கூறவே , அதையே பின்பற்ற துவங்கினேன்

6  எம் ஜி ஆர் என்றால் தொப்பி, பெரியார் என்றால் தாடி என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.. எனக்கும் ஒரு அடையாளம் தேவை என்பதால்தான் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன் .

This entry was posted in அரசியல் and tagged . Bookmark the permalink.

Leave a comment